Posts

Showing posts with the label Poetry

My Poetry in Tamil - கவிதை மனசு காரன்

Image
நான் கவிதை மனசு காரன், இருட்டில் வெளிச்சம் தேடுபவன் , மனித சந்தையில் மனிதம் தேடுபவன் , வெற்றி வேட்டை மனிதர்கள் மத்தியில் தானம் செய்பவன். ஆடம்பரத்தில் எளிமையை தேடுபவன் , வெற்றிக்கு முன்னாள் மண்டியிட மாட்டோம். வெற்றி கணிதர்களின் நேர்த்தி எங்களுக்கு ரசனையற்றது , பூவின் யதார்தம் போல் வரும் தோல்வியின் ரசிகர்கள் நாங்கள் . நாங்கள் உணர்வகளின் களஞ்சியம் , சத்தமாக இருக்காது எங்கள் வெளிப்பாடு அழகானதாகவே இருக்கும் . கவிதை மனா காரர்களே கை கொடுங்கள் உங்களால் தான் மழை பெய்கிறது. இடுக்குகலின் வெளிச்சம் நாங்கள் , தினம் மன தோல் உரிப்பவர்கள், மான் தோற்றம் கொண்ட சிங்கங்கள் நாங்கள் , கவிதைமனசு எங்கள் முகவரி மதம் இனம் சாதி , கலைஞன் இனத்தின் இடது சாரிகள் ஐயா நாங்கள் !

A Simple Tamil poem

Image
மாதா  பிதா  குரு  தெய்வத்திற்கு  முன்  வருபவள்  (பண்டிதர்கள்  மன்னிக்க !!) shoot the kuruvi பாடலின்  இரண்டாம்  வரியின்  சொல்ல  பட்ட  மகத்தான காரியத்தை  செய்பவள் கனவுகள், வருத்தங்கள் - வெற்றி , தோல்வி  என்ன  எல்லாம்  தருபவள் சில  சமயம்  அவள்  பூவா   கரும்பா  என்று  குழப்புபவள் பூ  என்று  நினைத்தாள்  கரும்பாக  மாறி  என்  பல்லை   உடைத்தவள் கரும்பென்று  நினைத்து  பொழுது  பூவாக  மாறி  என்னை  ஏமாற்றியதும்  உண்டு பல  சமயம் நீ  ஆசிரியை , தண்டனையும்  பாராட்டும்  மாறி  மாறி உண்டு  அடிக்கடி  காட்சி  பிழை  - கருத்து  பிழை  கொடுப்பவள் நீ  கொஞ்சம்  கரார்  பேர்வழி  தான்  ஆனால்  யாரிடிமும்  ஓரவஞ்சனை காட்டதவள் அனால்  எப்பொழுதும்  நீ  உண்மையே  பேசுபவள் அதனால்  உன்  பெயர்  நிஜம் உன்னை  தி...

ON EGO - சண்டை கோழை (Tamil poem by Rajesh)

Image
உள்ளே வருவது     எதுவாயினும்       உள்ளம் அனுமதி     கொடுப்பதிலை   , அறிவு சண்டையிட்டு வெளி ஏற்றுகிறது . அது , மனிதனாக இருக்கலாம் , கருத்தாக இருக்கலாம் , எதுவாயினும் அனுமதியை தடை செய்கிறது அறிவு .. ஏனன்றால் வருவது அனைத்தும்   " தான் "   என்ற அகம்பாவத்துடன்   , என்   " நானை "   மதிபிழக்க செய்கிறது . என் பகுத்தறிவை ஜெயிக்க எது வல்லது , இயற்கையா   , கவிதையா , குழந்தையா   அல்லது பெண்ணா .. பகுத்தலில் மிஞ்கவது உண்மை மட்டுமே , ஆதலால் உண்மை எனக்கு எதிலும்   மிஞ்சவில்லை உண்மை எதிலும் இல்லையா அல்லது நான் கரார் பேர்வழியா .. அறிவு உள்ளத்தின் சம்மதத்துடன் உண்மையை தேடுகிறது , உள்ளமோ   நானை   தேடுகிறது .

ON Beggars - Tamil writer சுஜாதாவின் கவிதை

Image
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்,கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்,பாயின்றிப் படுத்திருப்பாய், ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்,பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய் சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்,சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்,காஜா அடிப்பாய், கட்டடத்தில் கல் உடைப்பாய்,கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய் மேஜை துடைப்பாய், மேட்டினியில் இடிபடுவாய்,மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்,கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய் ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்,திரைப்படங்கள் எடுப்போம், திண்பண்டம் தந்திடுவோம் தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றிவரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்துவருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்.. குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திருகூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம் சில்லறையாய் இல்லை ...

ON Rarities of human life-Tamil poem - Rajesh's Chevrolet light கண் அழகி

Image
இந்த கவிதைக்கு lead கொடுத்த அவ்வை பாட்டியிக்கு நன்றி .. போட்டி மனப்பான்மை வளர்க்கும் மனைவிகளுக்கு இடையில், கார்ல் மார்க்ஸ் மனைவி போன்று தாயுள்ளம் கொண்ட மனைவி அரிது.. சுற்றி உள்ளவர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் மத்தியில்,உண்மையான திறமை இருத்தல் அரிது.. ஜீன்ஸ்,தலைவிரி,கண்மை என கவனம் விரும்பும் Chevrolet light கண் அழகிகளுக்கு இடையில் மேக்கப் இல்லாத ஆத்மாவை உதயம் ஆக்கும் கருணை கண் அழகி அரிது.. பெருமைக்கென பிள்ளை பெற்று,வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் காசுக்கும்,சேவைக்கும் வேலை செய்யும் ஆசிரியர்கள் மத்தியில், குழந்தைகளிடம் அலட்சியம் கட்டாதவர்கள் அரிது... கங்கை போன்று சகலமும் இருக்கும் இணைய குப்பையில் மேயும் மேதாவிகளுக்கு இடையில்,உபயோக நேரம் இருத்தல் அரிது.. புது பணக்கார பந்தா மடிகணினி மென்பொருள் பேர்வழிகளில்,தொப்பை இல்லாத அறிவாளிகளை பார்ப்பது அரிது.. சுயநல சினிமாகாரர்கள்,பணக்காரர்கள்,அரசியல்வாதிகள்,பெரும் புள்ளிகள் போன்ற மகாத்மாவுக்கு இடையில் உண்மை பேசும் சுயசரிதம் அரிது.. கோட்பாடின் துணை கொண்டு வாழ்வை அணுக முயற்சிக்கும் எளிமையான வ...

ON Loving - Tamil poem தனிமை to காதல் by Rajesh

Image
ஆசையின் ஆரம்பத்திர்க்கும் முடிவுக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது, ஆசைக்கு முன்னும் பின்னும் பெரிய வெற்றிடம். .. மனிதனின் முதல் ஆசை தன்னை பல படுத்தி கொள்வது,அதை சுற்றி இருப்பவர்களை நம்ப வைப்பது,நம்ப வைக்க மனிதர்கள் தேவை ..  ஆறு லட்சம் வருடங்களுக்கு முன்னால் முதல்  மனித பிறவி ஆன அந்த ஆப்பிரிக்க பெண்,  இதற்காகவும் ,தனிமை சிறையை உடைக்கவும் தான் இனப் பெருக்கில் இடுபட்டாளோ.. தனிமையும்,காதலும்-இந்த ரெட்டை சுகமான சுமைகளும் நம் உணர்வில் கலந்த பெட்ரோல், அதனால் தான் அதன் கலப்படதன்மையும்,விலையும் அதிகமாகி செல் கிறது... தன் உணர்வை,இருப்பை அங்கிகரிக்க,பிரதிபலிக்க(நிராகரிக்க?! ) ஒரு ஜீவன் தேவை படுகிறது, மனிதனக்கு மட்டும் ஏன் இந்த புகழ் மயக்கம்..?தன்னை தானே அறிந்தால் ,மற்றவர் புகழை எதிர்ப்பார்க்க மாட்டான். ஒரு வேளை தன்னை தானே நம்பாததால் இந்த முயற்சி? தனிமை என்ற சொல்லே சுய பட்சதாபம், தனித்து இருப்பதே சரியான வார்த்தை. தனித்து இருத்தல் நெருப்பை போன்றது தன்னை தானே உள்வாங்கி கொள்கிறான்.. அந்த நெருப்பில் தன் கர்வத்தை அழிக்கிறான். பெண்கள் ஆண...

ON Scientists LOVE - விஞ்ஞaனி காதல் -கவிதை முயற்சி by Rajesh

Image
டோபமின் சங்கீதம் பாடிய அந்த திருநாள்,காதல் ராகமே ஆதாரம். தோல்வி பயம் ரத்தத்தை தாக்கி வேகமாக்கியது அந்த தேவதை தரிசினத்தில். எனதாக்கி கொள்வதில் அவசரம் காட்டிய நான்,என் ரசம் சரமாகி நான் என் வசம் இல்லாமல் ஆனேன். அவள் பார்வையில், வாழ் நாள் வாழ வேண்டிய வாழ்கையை வாழ்ந்து முடித்தேன். இந்த காதலுக்காக நான் ராவணனாக,வாலியாக,துச்சதனாக மாற தயாராக வில்லை, மாறாக வாசுதேவன் கிருஷ்ணனை சுமந்தது போல் எதிர்ப்பு இடையே என் காதலை சுமந்து வந்தேன் என் மன கூடையில். பிரியாத வரம் கேட்டு ஏங்கினேன், பகுத்து அறியும் விண்வெளி விஞ்ஞானி,இன்று மனவெளி மெய் ஞானி மாறினேன் எத்துனுயோ தகவல் சுமந்த என் அறிவு ,இன்று காதல் சுமையால் பாரம் மற்றும் அபாரம் ஆகியது. வெளியை படித்திருந்தாலும் இன்று தான் நான் அதில் ரெக்கை முளைத்து பறந்தேன்,என் மன கூண்டில்.. காலம் என் காதலை கிரகணம் ஆக்கியது. இதோ இன்னொரு கல்லறை என் மன அறையில்.அதன் மீது எழுதி இருந்தது "தோன்றவும் இல்லை மறையவும் இல்லை" என் தனிமை தவத்தை கலைத்த மேனகை,அவளும் என் மீது காதல் வச பட்டிருப்பாலோ? திரும்பவும் தனிமை தவத்தில் ஆழ்ந்தேன்,வ...

ON Ironing man - Tamil poem கடிகார மூளை by Rajesh

Image
  மரத்தடி   கிளிஜோசிய   கரனை   போல்   அதிர்ஷ்டத்தை   நம்பாமல்  , உழைப்பை   நம்பும்   இஸ்திரிக்காரன்    நான் . என் உழைப்பை பற்றிய கர்வத்திற்கு களங்கம் ஏற்படுமாறு   இப்போது   ஒரு a/c கார் காரர் என் மர அலுவலகம்    முன் வண்டியை   நிறுத்தி ,   துணியை   முகத்தில்   எரிந்து என் உழைப்பை குறை   கூறினார் அந்த   அரைகுறை .   அவர் a/c கார் என் மரக்காற்றை மாசு படுத்தியது , காற்றை அடிமையாக்கும் அவர் எங்கே , இயற்கையோடு ஒட்டி வாழும் நான் எங்கே ?, என் உழைப்பை பற்றி அவரிடம் நான் சொல்ல நினைத்தது இதோ , உள்ளங்கால் முதல் உச்சன்தலை வரை... உள்ளங்கால் என் ரத்த அருவியின் முடிவான உள்ளங்கால் பரத கலைஞரின் பரிமாணத்திற்கு நிகரானது. கால் என் கால்கள் கால் பந்து வீரர் Pele- வுக்கு நிகரான வலிமையுற்றது. தொடை என் தொடை துரியோதனனை போல் வலிமையற்றது அல்ல மாறாக , பீமனை போன்று உக்கிரமானது. இடுப்பு சர்கஸ் காரியை போல் மெலிதானது. வயிறு துணியின் சுருக்கத்தை அகற்றும் என் வயிற்றி...

ON Talking - பேச்சு-கவிதை முயற்சி by Rajesh

Image
  அன்று மௌன விரதம் இருந்தேன் , அந்த மௌனம்    என் பேச்சு சரித்தரித்தை பேசி    காட்டியது , அழுகை   வராத சோகம் போல் மிகவும் அழுத்தமானது அந்த மௌனம் , மௌன மேடையில் பேச்சு நாடகங்கள் அரங்கேறியது … அந்த   மௌனம் பேசிய பேச்சுக்கள் , இதோ.... டெண்டுல்கர் அடித்த முதல் ஜீரோ போல் , ஐன்ஸ்டீன் , சர்ச்சிலின்   சிறு வயது பேச்சு திணறல்   போல் ,   என் சிறு வயது முதல் பேச்சு முயற்சி பலதும் தோல்வியே , ஆனால் பேச ஆரம்பித்த பிறகு சில ஜீரோ , மனைவியிடம் , பல நேர்காணல்களில் , பல சதங்களும் அடித்திருகிறேன் , தோற்ற பந்தயத்தில் உட்பட . பேச்சு தான்   மனிதனின்   பிள்ளையார்   சுழி , தலை   சுழி எல்லாமே,அதனால் தான் சிறுவயது கிருஷ்ணனின் வாயில் உலகும் தெரிந்ததோ? .. மனிதனின்   எல்லா சண்டைக்கு    ஆதி மூலம் பேச்சே.. மனித அரசியலின் பிறப்பு பேச்சு தான் , மனிதர்கள் பேசும்   பேரத்திற்கு சுயநல வியாபாரி சொன்ன பதில்கள் அத்தனையும் , கறுப்பு   உதடுகளின்   வெளிச்ச   உளறல்கள்... பேச்சில் பாசாங...

ON Roadside observing - சாலை பயணத்தில் நான் சந்தித்த சில வேடிக்கைகள் tamil poetry by Rajesh

Image
  சமூகம் என்பது கடல், அதில் நான் எடுத்த தகவல் குடம் அளவு. இந்த கவிதை பிறந்த இடம் சாலை. சாலையை பூக்களால் அலங்கரித்து இருக்கிறது ஒரு சடலம், குறவன்,குறத்தி சாக்கடை அருகே, கல்லூரி பெண் செல்போன் sms வுடன், cyclinder வண்டி இழுக்கும் குடும்பஸ்தன். இந்த சமூக கடலின் ஆழம், மணல் அளவு,நஷத்திரம் அளவு,உடல் செல் அளவு, இல்லை,இல்லை..இங்கு இருக்கும் ஜாதி அளவு. சமூகத்தின் இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி இருக்கும் நானே எந்த சமூகம், இந்த சமூகமே நான். ==ராஜ் ஈஷ்,March,2010

ON Clouds - நான் வானம் பேசுகிறேன்.....(கவிதை கிறுக்கல்) by Rajesh

Image
நான் வானம் பேசுகிறேன்..... பிரபஞ்ச ரகசியத்தை மறைக்கும் திரை நான், கீழே திரை விலகினால் நக்க்ஷதரங்களின் காட்சி, இங்கோ சூரியனின் ஆட்சி. வானூர்தியின் சாலை நான், அது தூவும் மாசுகளினால் நான் நிறம் மாறுவதில்லை, மனிதர்களை போல்.. இருப்பினும்,இவ்வளவு காலமாக ஒழித்து வைத்திருந்த, பிரபஞ்ச ரகசியத்தை உங்கள் ராக்கெட் கிழித்து எரிந்தது.. ------ராஜ் ஈஷ்,கோடைக்கானல்,23-10-2010